2009-04-03 18:45:22

வத்திக்கான் திருச்சங்க நிபுணர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . 030409 .


கர்தினால் உம்பெர்ட்டோ பெட்டி இவ்வாரம் புதன்கிழமையன்று ஏப்ரல் முதல் நாள் அவரது 87 வயதில் காலமானார் .வத்திக்கான் பொதுச்சங்கத்தின் போது அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டினை நினைவுகூர்ந்த திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவரது மறைவுக்கு மிக்க வருத்தம் தெரிவித்தார் . கர்தினால் பெட்டி பிரான்சிஸ்கன் துறவு மடத்தைச் சேர்ந்தவர் . அச்சபையின் தலைவர் ஜோஸ் கார்பால்லோவுக்குத் திருத்தந்தை தந்தி வழி தமது வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தார் . கர்தினால் உம்பெர்ட்டோ பெட்டி கிறிஸ்துவின் பணியில் ஆர்வத்தோடு ஆற்றிய பணிக்குக் கடவுளுக்கு நன்றி கூறினார் திருத்தந்தை .கர்தினால் பெட்டியின் மறைவுக்குப் பின் தற்பொழுது 186 கர்தினால் இருக்கிறார்கள் . இவர்களில் 80 வயதுக்குக் குறைவாக இருக்கும் 115 பேர் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்கள் .








All the contents on this site are copyrighted ©.