2009-04-03 18:43:44

முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பவுலை துணிவான கிறிஸ்துவின் சீடர் என அழைத்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . 030409 .


முந்நாள் திருத்தந்தை 2ஆம் ஜான் பவுல் மறைந்த 4 ஆம் நான்கு நினைவு அஞ்சலித் திருப்பலியை திருத்தந்தை 16 பெனடிக்ட் இந்த வியாழன் மாலை வத்திக்கான் பசிலிக்காவில் நிறைவேற்றினார் . திருப்பலியில் இளையோர் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டனர் . அடுத்து வரும் ஞாயிறு அன்று கொண்டாடப்பட உள்ள உலக இளையோர் தினத்துக்கு இது ஒரு தயாரிப்பாக இருந்தது . முந்நாள் திருத்தந்தை அவரது வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவுக்காக செலவிட்டதாகத் தமது மறையுரையின்போது தெரிவித்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . எங்கும் கிறிஸ்துவின் ஒளியைப்பரப்பவும் , கிறிஸ்துவின்மீது நம்பிக்கையை உருவாக்கவும் 2 ஆம் ஜான் பவுல் தமது சக்தியை எல்லாம் செலவிட்டதாக மேலும் தெரிவித்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.