தேசிய கடற்பணித் துறை கருத்தரங்கின் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார் பேராயர்
அகஸ்தீனோ மார்க்கெட்டோ . 030409 .
இக்கருத்தரங்கு இத்தாலியின் ஜெனோவாவில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து 4 தேதி வரை நடந்து
வருகிறது . இடம் பெயர்வோர் மற்றும் பயணத்தில் இருப்போருக்கான வத்திக்கான் திருப்பீடத்தின்
மன்றச் செயலராக இருப்பவர் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ . கடலில் பணி செய்வோர் , மீன்
பிடிப்போர் , அவர்களது குடும்பங்கள் இவர்கள் சார்பாக திருப்பீடத்தின் இடம் பெயர்வோருக்கான
மன்றத்தின் புதிய தலைவர் பேராயர் அந்தோனியோ மரிய வேலியோவுக்கு வாழ்த்துக்கூறி , இம்
மன்றத்தினர் புதிய தலைவர் பேராயர் வேலியோவுக்கு எல்லா வகையிலும் துணையிருப்பார்கள் எனக்
கூறினார் பேராயர் மார்க்கெட்டோ . இத்தாலிய துறைமுகங்களில் ஆண்டு ஒன்றுக்கு 50 இலட்சம்
கடற்பயணியர் வந்து போவதாக ஆய்வு தெரிவிப்பதாக பேராயர் மார்க்கெட்டோ தெரிவித்தார் . இவர்கள்
கிறிஸ்தவமறைக்குச் சான்றுபகரும் முறையில் தங்கள் பணிகளைச் செய்ய முயற்சிக்க வேண்டும்
எனக் கேட்டுக்கொண்டார் பேராயர் மார்க்கெட்டோ .