திருத்தூதர் பேதுருவின் குழவினரை இவ்வெள்ளிக்கிழமை காலை வரவேற்றுப்பேசினார் திருத்தந்தை
16 ஆம் பெனடிக்ட் .030409 .
தூய பேதுரு மன்றத்தினர் திருத்தந்தையின் ஏழைகளுக்கான தொண்டுகளுக்கும் , உரோமையில் வறுமையில்
வாடுவோருக்கும் பல வகைகளில் உதவி புரிந்து வருகிறார்கள் . திருத்தந்தையைச் சந்தித்த தொடக்கத்தில்
குழுவினரின் சார்பாக அதன் தலைவர் பிரபு லெயோபால்டோ தோர்லோனியா திருத்தந்தையை வாழ்த்திப்
பேசினார் . குழுவினரோடு அவர்களை வழிநடத்தும் மேதகு பிராங்கோ கமால்டோவும் சந்திப்பில்
கலந்திருந்தார் . அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பாராட்டிய திருத்தந்தை அவர்களுடைய மனிதாபிமான
செயல்களைப் பாராட்டி திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாகிய திருத்தந்தைக்கும் காட்டும்
அன்புக்கும் நன்றி கூறினார் . சந்தி்ப்பின் இறுதியில் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும்
தமது அப்போஸ்தலிக்க ஆசியை திருத்தந்தை வழங்கினார் .