2009-04-02 20:17:45

 அர்ஜெண்டீனாவி்ன் ஆயர்களை வியாழன் காலை வரவேற்றுப்பேசினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .020409 .


இந்த வியாழன் காலை அத்லீமினா சந்திப்புக்காக திருத்தந்தையை காணவந்திருந்த அர்ஜெண்டீனாவின் ஆயர்களுக்கு உரை வழங்கிய திருத்தந்தை அந்நாட்டில் இறையரசை நிறுவ எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார் . சந்தி்ப்பின் தொடக்கத்தில் ஆயர்கள் குழுவின் சார்பில் திருத்தந்தைக்கு வாழ்த்துக் கூறிய ஆயர் அல்போன்சோ தெல்காடோவுக்கு தம் நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை . கிறிஸ்தவ மதிப்பீடுகளோடு மறைபரப்புதல் பணி அங்கு தொடரவேண்டும் என அறிவுறுத்தினார் திருத்தந்தை . கடவுள் உலகை அன்பு செய்தார் என்பதை நாம் கிறிஸ்துவின் வழியாக அறிவோம் . நாம் கிறிஸ்துவின்மீது கொண்டிருக்கும் அன்பை நம்முடைய எளிமையான , தூய்மையான சான்றுபகரும் வாழ்வால் தெளிவாக்க வேண்டும் என முந்நாள் திருத்தந்தை கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார் . இறைவார்த்தையையும் , திருச்சபையையும் , இவ்வுலகையும் அன்பு செய்வோம் எனக்கூறிய திருத்தந்தை திருச்சபைக்குப் பிரமாணிக்கமாக இருக்கவேண்டும் என்றும் , மக்கள்மீது பாசமிக்கவர்களாக இருந்து நம் உள்ளங்களில் நாம் கொண்டிருக்கும் இறை நம்பிக்கையை மக்களுக்கும் வழங்கவேண்டும் எனவும் கூறி அர்ஜெண்டீனாவின் லூஜன் மாதாவின் அடைக்கலத்தில் அந்நாட்டை அர்ப்பணித்து தம் அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.