அர்ஜெண்டீனாவி்ன் ஆயர்களை வியாழன் காலை வரவேற்றுப்பேசினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
.020409 .
இந்த வியாழன் காலை அத்லீமினா சந்திப்புக்காக திருத்தந்தையை காணவந்திருந்த அர்ஜெண்டீனாவின்
ஆயர்களுக்கு உரை வழங்கிய திருத்தந்தை அந்நாட்டில் இறையரசை நிறுவ எடுக்கும் முயற்சிகளைப்
பாராட்டிப் பேசினார் . சந்தி்ப்பின் தொடக்கத்தில் ஆயர்கள் குழுவின் சார்பில் திருத்தந்தைக்கு
வாழ்த்துக் கூறிய ஆயர் அல்போன்சோ தெல்காடோவுக்கு தம் நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை
. கிறிஸ்தவ மதிப்பீடுகளோடு மறைபரப்புதல் பணி அங்கு தொடரவேண்டும் என அறிவுறுத்தினார் திருத்தந்தை
. கடவுள் உலகை அன்பு செய்தார் என்பதை நாம் கிறிஸ்துவின் வழியாக அறிவோம் . நாம் கிறிஸ்துவின்மீது
கொண்டிருக்கும் அன்பை நம்முடைய எளிமையான , தூய்மையான சான்றுபகரும் வாழ்வால் தெளிவாக்க
வேண்டும் என முந்நாள் திருத்தந்தை கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார் . இறைவார்த்தையையும்
, திருச்சபையையும் , இவ்வுலகையும் அன்பு செய்வோம் எனக்கூறிய திருத்தந்தை திருச்சபைக்குப்
பிரமாணிக்கமாக இருக்கவேண்டும் என்றும் , மக்கள்மீது பாசமிக்கவர்களாக இருந்து நம் உள்ளங்களில்
நாம் கொண்டிருக்கும் இறை நம்பிக்கையை மக்களுக்கும் வழங்கவேண்டும் எனவும் கூறி அர்ஜெண்டீனாவின்
லூஜன் மாதாவின் அடைக்கலத்தில் அந்நாட்டை அர்ப்பணித்து தம் அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார்
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .