பொதுத் தேர்தல்கள் சுமுகமாக நடைபெறுமாறு செபிக்க இந்திய ஆயர் பேரவை கிறிஸ்தவர்களைக் கேட்டுள்ளது
மார்ச்28,2009. இந்தியாவில் வருகிற ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்
தேர்தல்கள் சுமுகமாக நடைபெறுமாறு அந்நாட்களில் சிறப்பாகச் செபிக்குமாறு இந்திய ஆயர் பேரவை
கிறிஸ்தவர்களைக் கேட்டுள்ளது.
இந்திய ஆயர் பேரவை செயலர் பேராயர் ஸ்தனிஸ்லாஸ் பெர்ணான்டஸ்
தலத்திருச்சபைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பொதுத் தேர்தல்கள் முடிந்து
புதிய அரசு ஆட்சி அமைக்கும் வரை கிறிஸ்தவர்கள் தொடர்ந்து செபிக்குமாறு கேட்டுள்ளார்.
மேலும்,
கென்ய நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள், புதிய பொதுத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுப்பதை நிறுத்துமாறு
வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
2007ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலுக்குப்
பின்னான வன்முறைகளின் விளைவுகளைச் சரிசெய்து கொண்டிருக்கும் அந்நாட்டில் மீண்டும் பொதுத்
தேர்தல்கள் நடத்தப்பட அழைப்புவிடுப்பது உகந்ததல்ல என்று எல்டோரெட் ஆயர் கொர்னேலியுஸ்
அரப் கொரிர் கூறியுள்ளார்.