2009-03-27 19:33:03

பல்வேறு கிறிஸ்தவத் தலைவர்கள் கூடி மறைப்பணிக்குத் திட்டமிட உள்ளனர் .270309 .


பல் வேறு கிறிஸ்தவ சமயங்களின் கலந்துரையாடலுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது .

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு 2010 ல் பிரிட்டனின் எடின்பரோவில் பல் வேறு கிறிஸ்தவத் தலைவர்கள் ஒன்று கூடி மறைப்பணிக்குத் திட்டமிட உள்ளனர் . இந்த கிறிஸ்தவக் கலந்துரையாடலை ஆசியக் கிறிஸ்தவத் தலைவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பதாக , ஆசிய ஆயர்கள் கழகத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல் சமயக் கலந்துரையாடலுக்கான மன்றத்தின் செயலர் இந்தியாவைச் சேர்ந்த அருள் சகோதரி கிளமென்ஸ் மென்டோன்சா தெரிவித்தார் .

2010 ல் நடக்க உள்ள கிறிஸ்தவ ஐக்கிய கருத்தரங்கு பற்றி தென் கொரியாவின் சியோலில் இம்மாதம் 23 , 24 தேதிகளில் கிறிஸ்தவ அறிஞர்கள் 20 பேர் கூடித் திட்டமிட்டனர் . மேலை நாட்டிலிருந்து பல புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவ அறிஞர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர் . வரவிருக்கும் 2010 ஆம் ஆண்டு கருத்தரங்கில் சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கும் , வறுமையில் வாடுவோர்க்கும் மறைப்பணி புரிவது பற்றித் திட்டமிடப்பட உள்ளது .








All the contents on this site are copyrighted ©.