பாத்திமா மாதாவின் காட்சிகளைக்கண்ட பிரான்சிஸ்கோ மார்த்தோவின் 100 ஆவது பிறந்த நாள் விழாச்
சிறப்பிக்கப்பட உள்ளது .260309 .
பாத்திமா மாதாவின் காட்சிகளைக்கண்ட பிரான்சிஸ்கோ மார்த்தோவின் 100 ஆவது பிறந்த நாள் விழாச்
சிறப்பிக்கப்பட உள்ளது .
வருகின்ற ஜூன் மாதம் 18 லிருந்து 20 வரை போர்த்துக்கல்
நாட்டின் பாத்திமாவில் உள்ள மறைப்பணி மையத்தில் பிரான்சிஸ்கோ மார்த்தோவைப் பற்றிக் கருத்தரங்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . ஆண்டவன் கொடைக்காக வளர்ச்சி பெறுதல் என்பது கருத்தரங்கின்
மையக்கருத்தாக இருக்கும் . கருத்தரங்கின் இறுதி நாளில் போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனின்
பிதாப்பிதா கர்தினால் ஜோஸ் போலிகார்ப்போ உரை நிகழ்த்துவார் . குழந்தைகள் சந்திக்கும்
சவால்கள் பற்றி அதுபோது பேச உள்ளார் .
பிரான்சிஸ் மார்த்தோ ஜூன் மாதம் 11 ல்
1909 ஆம் ஆண்டு பிறந்தார் . முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் பிரான்சிஸ்கோவுக்கும்
அவரது சகோதரி ஜசிந்தாவுக்கும் 2000 ஆம் ஆண்டில் முத்திப்பேறு பட்டம் வழங்கினார் . ஜசிந்தாவும்
, பிரான்சிஸ் மார்த்தோவும் மற்றும் அவர்கள் உறவினர் லூசியா சாந்தோசும் பாத்திமா அன்னையை
1917 ஆம் ஆண்டு நேரில் தரிசனம் கண்டனர் .