கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதை ஆய்வு செய்யும் கழகங்கள் நம்பிக்கைக்குரியனவா
எனக் கேள்வி எழுப்புகிறார் பேராயர்.260309 .
சென்ற ஆண்டு கிறிஸ்தவர்கள் கர்நாடக மாநிலத்தில் தாக்கப்பட்டனர் . அதை ஆய்வு செய்யும்
பொறுப்பாண்மைக் குழு ஒரு தலைச் சார்பாகச் செயல்படுவதாக இம்மாதம் 21 ஆம் தேதி தெரிவித்தார்
பங்களூர்ப் பேராயர் பெர்நார்டு மோராஸ் . சாட்சிகளிடம் கேள்விகளைக் கேட்கும்போது குழப்பம்
தரக்கூடிய கேள்விகளைக் கேட்டும் , செய்தித் தொடர்பாளர்களைக் கூட்டமாக அமரச் செய்து தவறாகச்
செய்திகளை பரப்புவதற்கு வழிசெய்வதாகவும் பேராயர் தெரிவித்தார் . கர்நாடக மாநிலத்தில்
ஆட்சியில் இருக்கும் இந்துமதத் தீவிர இயக்கமான பிஜேபி அரசு அம்மாநில ஓய்வு பெற்ற நீதிபதி
பி.கே சோமா ஷேகரை ஆய்வு செய்யுமாறு நியமித்துள்ளது .
2008 ஆம் ஆண்டு 24 கிறிஸ்தவத்
தேவாலயங்கள் தாக்கப்பட்டிருந்தன . மதத் தீவிர வாதிகள் ஆலயங்களைச் சூறையாடி , அங்கிருந்த
பொருட்களுக்குத் தீ வைத்து நாசம் செய்தனர் .