2009-03-26 15:59:59

கர்தினால் ஜார்ஜ் குடியேற்றதாரர்களுக்கு எதிரான போக்கை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கேட்டுள்ளனர் . 260309 .


சிக்காக்கோ மறைமாவட்டக் கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் . சிக்காக்கோவின் ஆயிரக்கணக்கான மக்களோடு குடியேற்றதாரர்களை சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு சர்வ சமயப் பிரார்த்தனையில் இம்மாதம் 21 ஆம் தேதி கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜூம் கலந்து கொண்டு செபித்தார் . இது சிக்காக்கோவின் இரக்கத்தின் மாதா ஆலயத்தில் நடந்தது . அமெரிக்காவின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் குடியேற்றதாரர்களுக்குப் பாதுகாப்புத் தருமாறு செபங்கள் எழுப்ப உள்ளதாக அமெரிக்காவின் லூயி குட்டியெரெஸ் தெரிவித்துள்ளார் . நீதிக்கு எதிரான குடியேற்றதாரர்களுக்கான சட்டங்கள் குடும்பங்களைக் கூறுபோடுவதாக பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற மூவர் சாட்சியம் வழங்கினர் .








All the contents on this site are copyrighted ©.