2009-03-25 14:43:05

உலகில் அமைதியைக் கட்டி எழுப்ப உழைப்பவர்களுக்கென புதிய இணையதளம், சர்வதேச காரித்தாஸ் முயற்சி


மார்ச்25,2009. உலகில் அமைதியைக் கட்டி எழுப்ப உழைப்பவர்களுக்கென இணையதள பக்கத்தைத் திறந்துள்ளது சர்வதேச காரித்தாஸ் அமைப்பு.

1980ம் ஆண்டு மார்ச் 24 ம்தேதி சான் சால்வதோர் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த போது கொல்லப்பட்ட பேராயர் ஆஸ்கார் ரொமேரோவுக்கு இவ்விணையதள பக்கத்தை அர்ப்பணித்துள்ளது அவ்வமைப்பு.

அமைதியைக் கட்டி எழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள், மோதல்கள் இடம் பெறும் சூழல்களில் வேலை செய்யும் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்க்கென இப்பக்கம் திறக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் சமூகத் தொடர்பு சாதனத் துறை தலைவர் பாட்ரிக் நிக்கோல்சன் கூறினார்.

இப்பக்கத்தைப் பெரும்பாலான மக்கள் வாசிக்க முடியாதெனினும் பயிற்சியாளர்கள் தகவல்களைப் பெறுவதற்கும் உலகில் மோதல்கள் குறைவதற்கும் இது உதவும் என்றும்

நிக்கோல்சன் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.