ஆப்ரிக்கக் கண்டம் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட திருத்தந்தை அழைப்புவிடுத்தார் என்றார்
திருப்பீடப் பேச்சாளர்
மார்ச்24,2009. ஆப்ரிக்கக் கண்டத்தின் முக்கிய பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொணர்ந்துள்ளதுடன்
தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுமாறு இத்திருப்பயணத்தின் போது திருத்தந்தை அழைப்புவிடுத்தார்
என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபை குரு பெதெரிக்கோ லொம்பார்தி.
வத்திக்கான்
வானொலி இயக்குனரும் திருப்பீடப் பேச்சாளருமான குரு லொம்பார்தி திருத்தந்தையின் ஆப்ரிக்கப்
பயணம் குறித்து இன்று வழங்கிய பேட்டியில் ஆப்ரிக்காவின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண
கிறிஸ்தவர்கள் அனைவரும் அர்ப்பணத்துடன் செயல்பட வேண்டுமெனத் திருத்தந்தை அழைப்புவிடுத்ததைச்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாப்ரிக்கப் பயணத்தின் போது இளைஞர்களுடனானச் சந்திப்புக்கு
மட்டுமல்ல, பெண்களுடன் ஆன சந்திப்புக்கும் திருத்தந்தை முக்கியத்துவம் வழங்கியது, குடும்பங்களில்
அவர்களின் மைய இடத்தை அங்கீகரித்தது ஊக்கமளிப்பதாக இருந்தது எனபதையும் சுட்டிக்காட்டியுள்ளார்
திருப்பீடப் பேச்சாளர்