2009-03-23 16:01:04

பிரேசிலில் ஸ்பானிய குரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்


மார்ச்23,2009. பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் தெருவாழ் சிறார்களிடையே பணியாற்றிவந்த 64 வயது ஸ்பானிய குரு ஒருவர் அடையாளம் தெரியாத மனிதர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பிரேசிலின் பெர்நாம்புக்கோ மாநிலத்தின் ரெசிப்பே என்ற நகரில் பணியாற்றிவந்த குரு ரமிரோ லுதுனெயோ நண்பர்களுடன் இரவு உணவை முடித்துவிட்டு திரும்பும் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

34 ஆண்டுகள் பிரேசிலில் பணியாற்றியுள்ள இந்த ஸ்பானிய குருவுக்கு எதிரிகள் யாரும் இல்லையெனக் கூறினார் இவருடன் தெருவாழ் சிறார்களிடையே பணியாற்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாண்டோ கோமஸ்.








All the contents on this site are copyrighted ©.