கருத்து வேறுபாடு பற்றிப் பேச அழைக்கப்பட்ட சீனாவின் கத்தோலிக்கக் குருவானவர் அடித்துத்
துன்புறுத்தப்பட்டுள்ளார் . சீனாவின் ஷான்சி மாநில கத்தோலிக்கக் குருவானவர் பிரான்சிஸ்
காவோ கருத்துவேறுபாடு உள்ள திருச்சபைச் சொத்துப் பற்றி விவாதம் செய்ய அரசு அலுவலகத்துக்கு
இம்மாதம் 16 ஆம் தேதி அழைக்கப் பட்டிருக்கிறார் . அங்கு அருள்தந்தை பிரான்சிஸ் காவோவை
இருவர் நையப்புடைத்துக் காயப்படுத்தியுள்ளனர் . அவர் அங்குள்ள பாவோஜி மருத்துவ மனையில்
சேர்க்கப்பட்டிருக்கிறார் . தர்க்கத்துக்குரிய திருச்சபைக்குச் சொந்தமான ஓரிடத்தை முடிவான
தீர்வுக்குப் பிறகே எவரும் பயன்படுத்தவேண்டும் என்று அரசு ஒப்புதல் கொடுத்தபிறகு இந்த
ஆண்டு அதைக் கையகப்படுத்தத் தொடங்கியது . 100 பேருடன் தந்தை காவோ அங்குச் சென்று அதைத்
தடுக்க முயன்றபோது அடையாளம் தெரியாத சிலர் அங்கு வந்து கிறிஸ்தவர்களை எச்சரித்துள்ளனர்
. பின்னர் மேயர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை காவோவை இருவர் தாக்கிக்
காயப்படுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன . அரசு அலுவலகத்தில் குற்றத்தைப் பதிவு
செய்ய முயன்றபோது தடுக்கப்பபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .