பாகிஸ்தானில் நீக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மீண்டும் பணி. கிறிஸ்தவர்கள் பாராட்டு.
190309 .
பாகிஸ்தானில் உச்ச நீதிமன்ற நீதிபதியையும் மேலும் வேறு பத்து நீதிபதிகளையும் மீண்டும்
பணியில் சேர்த்துள்ளதை பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் வரவேற்றுள்ளார்கள் .
நாட்டின்
தலைவர்கள் சரியான முடிவை எடுத்ததற்கு அவர்களைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளனர் . சீர்குலைந்து
வரும் நாட்டின் பொருளாதாரச் சூழலில் , வன்முறைகள் தலைவிரித்து ஆடும் நிலையில் இந்த நடவடிக்கை
பாராட்டுக்குரியது எனத் தெரிவித்துள்ளார் ராவல்பிண்டி மறைமாவட்ட முதன்மைக்குரு அருள்தந்தை
ஜேக்கப் டோக்ரா . நீதி மன்றங்களில் நல்லத் தீர்ப்புக்களைப் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகத்
தந்தை ஜேக்கப் தெரிவித்துள்ளார்