2009-03-19 14:51:21

ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றம் ஆப்ரிக்க மக்களில் நம்பிக்கை அதிகரிக்க உதவட்டும், திருத்தந்தை


மார்ச்19,2009. 14 ஆண்டுகளுக்கு முன்னர், 1995ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி இந்த யவுந்தேயில் திருத்தந்தை 2ம் ஜான் பவுல் ஆப்ரிக்காவுக்கான முதல் சிறப்பு ஆயர் மன்றத்தின் தீர்மானத் தொகுப்பை வழங்கினார். இன்று ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றத்தில் விவாதிக்கப்பட இருக்கும் தொகுப்பு ஏட்டை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இது உங்களது சிந்தனைகளின் கனியாகும். இது, ஆப்ரிக்காவில் திருச்சபையின் உயிரூட்டத்தையும் அத்திருச்சபை எதிர்கொள்ளும் சவால்களையும் முன்வைக்கிறது. இந்த ஆயர் மன்றமானது ஆப்ரிக்க மக்களில் நம்பிக்கை அதிகரிக்க உதவட்டும் என விழைகிறேன். மறைமாவட்டங்களில் ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கான புதிய நற்செய்திப் பணிக்குத் தூண்டுதலாக இருக்கட்டும். ஆப்ரிக்கத் திருச்சபையின் இக்கொண்டாட்ட மகிழ்வானது, அகிலத் திருச்சபையாலும் பகிர்ந்து கொள்ளப்படட்டும். ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கானப் பணி செய்வோரின் முயற்சிகளை அமைதியின் அரசி வழிநடத்துவாளாக. ஆப்ரிக்காவின் நமதன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று இவ்வுரையை முடித்தார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.