2009-03-18 15:27:31

வத்திக்கானில் மகளிர்க்கான சர்வதேச கருத்தரங்கு


மார்ச்18,2009. மகளிர், வாழ்வு மீதான அன்புக்குச் சாட்சிகளாகத் திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் சர்வதேச கருத்தரங்கை வருகிற வெள்ளி, சனி தினங்களில் வத்திக்கானில் நடத்தவுள்ளது நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவை.

வாழ்வு, குடும்பம், முன்னேற்றம் : மனித உரிமைகளை ஊக்குவிப்பதில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் முதன்முறையாக நடைபெறவுள்ள இக்கருத்தரங்கை, வாழ்வு மற்றும் குடும்பத்திற்கான சர்வதேச மகளிர் கழகமும் கத்தோலிக்க மகளிர் நிறவனங்களின் உலகக் கூட்டமைப்பும் இத்திருப்பீட அவையுடன் சேர்ந்து நடத்தவுள்ளன.

இதில் உலகெங்கிலுமிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட வல்லுனர்களும் விஞ்ஞானிகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.