2009-03-18 15:24:04

மனச்சான்றின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறுவது ஒரு நாட்டை ஜனநாயகத்திலிருந்து கொடுங்கோலாட்சிக்கு இட்டுச் செல்லும், சிகாகோ கர்தினால் எச்சரிக்கை


மார்ச்18,2009. மனச்சான்றின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறுவது ஒரு நாட்டை ஜனநாயகத்திலிருந்து கொடுங்கோலாட்சிக்கு இட்டுச் செல்லும் என்று சிகாகோ கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் எச்சரித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் ஜார்ஜ் வெளியிட்டுள்ள ஒலி-ஒளிநாடாச் செய்தியில், மனச்சான்றின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று தாங்கள் விரும்புவதாக மக்கள் ஒபாமா நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

எந்த ஓர் அரசும் மனிதருக்கும் கடவுளுக்கும் இடையில் நிற்கக்கூடாது, இவ்வாறுதான் அமெரிக்கா இருக்க வேண்டும் என்றும் கூறும் அச்செய்தி, சமய மற்றும் மனச்சான்றுகளின் சுதந்திரங்கள் சட்டப்படி பாதுகாக்கப்பட வேண்டுமென்ற தேவை ஏற்பட்டுள்ளது என்றும் உரைக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.