அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, ' ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு
எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?
எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ' ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை
என நான் உனக்குச் சொல்கிறேன். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா
விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.
அனைத்தையும்
மன்னித்த இயேசு இன்று நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி- அயலானை நீ மன்னிக்காத போது உன்
வழிபாடு அர்த்தமற்றது. நீ செலுத்தும் காணிக்கையும் பொருளற்றது. எந்த அளவையால் நீ அளப்பாயோ
அதே அளவையால் உனக்கு அளக்கப்படும். நீ பிறரை மன்னிக்காவிட்டால் கடவுளிடம் மன்னிப்புப்
பெற உனக்கு உரிமை இல்லை