2009-03-13 20:19:47

போலந்து நாட்டு ஆயர்களுக்கு போலிசாருடன் இரகசிய உறவில்லை.130309.


இரகசியப் போலிசாருடன் போலந்து நாட்டு ஆயர்களுக்கு உறவு ஏதும் இருக்கவில்லை என வத்திக்கான் திருப்பீடம் தெரிவித்துள்ளதாகப் போலந்து ஆயர்கள் கூறியுள்ளனர் . கம்யூனிச ஆட்சி காலத்தில் போலந்து நாட்டு ஆயர்கள் ஆட்சியாளர்களுக்கு இரகசியங்களைப் பரிமாறி உதவி புரிந்ததாகக் குற்றச் சாட்டுகள் இருந்து வந்தன . அதனை விசாரித்த வத்திக்கான் அப்படிப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என இம்மாதம் 11 ஆம் தேதி அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் போலந்து நாட்டின் ஆயர்கள் . 1947 – 89 ஆண்டுகளில் கம்யூனிசம் அங்கு ஆட்சி புரிந்தபோது தவறு ஏதும் கத்தோலிக்கர்களால் நடக்கவில்லை என வத்திக்கான் திருப்பீடச் செயலர் கர்தினால தார்சீசியோ பெர்த்தோனே, பிரேமிசில் பேராயர் ஜோசம் மிஷாலிக்குக்கு மடல் வழித் தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.