போலந்து நாட்டு ஆயர்களுக்கு போலிசாருடன் இரகசிய உறவில்லை.130309.
இரகசியப் போலிசாருடன் போலந்து நாட்டு ஆயர்களுக்கு உறவு ஏதும் இருக்கவில்லை என வத்திக்கான்
திருப்பீடம் தெரிவித்துள்ளதாகப் போலந்து ஆயர்கள் கூறியுள்ளனர் . கம்யூனிச ஆட்சி காலத்தில்
போலந்து நாட்டு ஆயர்கள் ஆட்சியாளர்களுக்கு இரகசியங்களைப் பரிமாறி உதவி புரிந்ததாகக் குற்றச்
சாட்டுகள் இருந்து வந்தன . அதனை விசாரித்த வத்திக்கான் அப்படிப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு
எந்தவித ஆதாரமும் இல்லை என இம்மாதம் 11 ஆம் தேதி அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்
போலந்து நாட்டின் ஆயர்கள் . 1947 – 89 ஆண்டுகளில் கம்யூனிசம் அங்கு ஆட்சி புரிந்தபோது
தவறு ஏதும் கத்தோலிக்கர்களால் நடக்கவில்லை என வத்திக்கான் திருப்பீடச் செயலர் கர்தினால
தார்சீசியோ பெர்த்தோனே, பிரேமிசில் பேராயர் ஜோசம் மிஷாலிக்குக்கு மடல் வழித் தெரிவித்ததாக
அறிவிக்கப்பட்டுள்ளது .