2009-03-13 20:03:41

ஆஸ்திரியக் கருத்தரங்கு, கடவுள் பற்றை நாம் வாழ்ந்து காட்டவேண்டும் 130309


ஆஸ்திரிய நாட்டில் நடந்த கிரேக்கக் கத்தோலிக்கக் கருத்தரங்கில் கலந்து பேசிய உறுப்பினர்கள் நம் கடவுள் பற்றை நாம் வாழ்ந்து காட்டவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர் . ஆஸ்திரியாவின் கேமிங் நகரில் கிரேக்க கத்தோலிக்க சபைகளின் பிரதிநிதிகள் இம்மாதம் 4 தேதியிலிருந்து 6 தேதி வரை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவப் பணி பற்றி கருத்துப்பரிமாறினர் . இதில் 17 ஆயர்களும் 20 நாடுகளிலிருந்து குருக்கள் , அறிஞர்கள் மற்றும் பொது நிலைக் கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டிருந்தார்கள் . கம்யூனிசம் கிறிஸ்தவத்தை நசுக்க எவ்வளவோ முயன்றும் , திருச்சபை வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள் . கிறிஸ்தவம் பிரிவினை சக்திகளைச் சந்தித்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு வாழ முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அகில உலகுக்கும் சொந்தமாகிய இயேசுவின் நற்செய்தியை வாழ்ந்து காட்டவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் . கருத்தரங்கில கலந்து கொண்ட வியன்னாவின் கர்தினால் கிறிஸ்டோப் ஷோன்பான் கிரேக்கக் கத்தோலிக்கத் திருச்சபை மேலை நாட்டவருக்கு வழிபாட்டின் அழகைச் சுவைக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.