பொருளாதாரச் சிக்கல் நம்பிக்கையை வளர்ப்பதற்கு வாய்ப்பாகும் என்கிறார் பேராயர் ரவாசி
. வத்திக்கான் திருப்பீட கலாச்சார மன்றத்தின் தலைவராக பேராயர் ரவாசி இருந்து வருகிறார்
.
கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி உரோமையில் உள்ள ஜான் லாத்தரன்
பசிலிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்து உரையாடலில் இத்திங்களன்று கலந்துகொண்டு
நம்பிக்கையை வளர்க்க வேண்டும் கருத்துத் தெரிவித்தார் . நிகழ்ச்சிக்கு உரோமை மறைமாவட்ட
முதன்மைக்குரு கர்தினால் அகஸ்தீனோ வல்லினி தலைமை தாங்கினார் . சமூக பொருளாதார நிலைமை
பற்றி ஜோசப்பே ரீட்டா என்ற வல்லுநர் உரை வழங்கினார் . பொருளாதாரப் பின்னடைவு பற்றிப்பேசிய
பேராயர் கருஞ்சிவப்பு நிறம் மாறி அழுத்தமான செந்நிறமாவது போல மக்கள் வாழ்வையும் உணர்வுகளையும்
பொருளாதாரப் பின்னடைவு பாதித்துள்ளதாகத் தெரிவித்தார் . நிறமாற்றம் போல வாழ்வில் உண்டாகும்
மாற்றங்களும் நம்முடைய தேவ நம்பிக்கையும் விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கு மாறவேண்டும்
என அறிவுறுத்தினார் . உடல் சார்ந்த நம்பி்க்கைகள் தேய்வதும் வளர்வதும் இயல்பாகும் . நம்
துன்பங்கள் வழியாக இறைப்பற்றை ஆழப்படுத்த கிறிஸ்து அருள்தருகிறார் எனப் பேராயர் கருத்துத்
தெரிவித்தார் .