2009-03-12 17:39:16

துன்பங்கள் இறைப்பற்றை ஆழப்படுத்தும் பேராயர் ரவாசி . 120309 .


பொருளாதாரச் சிக்கல் நம்பிக்கையை வளர்ப்பதற்கு வாய்ப்பாகும் என்கிறார் பேராயர் ரவாசி . வத்திக்கான் திருப்பீட கலாச்சார மன்றத்தின் தலைவராக பேராயர் ரவாசி இருந்து வருகிறார் .





கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி உரோமையில் உள்ள ஜான் லாத்தரன் பசிலிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்து உரையாடலில் இத்திங்களன்று கலந்துகொண்டு நம்பிக்கையை வளர்க்க வேண்டும் கருத்துத் தெரிவித்தார் . நிகழ்ச்சிக்கு உரோமை மறைமாவட்ட முதன்மைக்குரு கர்தினால் அகஸ்தீனோ வல்லினி தலைமை தாங்கினார் . சமூக பொருளாதார நிலைமை பற்றி ஜோசப்பே ரீட்டா என்ற வல்லுநர் உரை வழங்கினார் . பொருளாதாரப் பின்னடைவு பற்றிப்பேசிய பேராயர் கருஞ்சிவப்பு நிறம் மாறி அழுத்தமான செந்நிறமாவது போல மக்கள் வாழ்வையும் உணர்வுகளையும் பொருளாதாரப் பின்னடைவு பாதித்துள்ளதாகத் தெரிவித்தார் . நிறமாற்றம் போல வாழ்வில் உண்டாகும் மாற்றங்களும் நம்முடைய தேவ நம்பிக்கையும் விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கு மாறவேண்டும் என அறிவுறுத்தினார் . உடல் சார்ந்த நம்பி்க்கைகள் தேய்வதும் வளர்வதும் இயல்பாகும் . நம் துன்பங்கள் வழியாக இறைப்பற்றை ஆழப்படுத்த கிறிஸ்து அருள்தருகிறார் எனப் பேராயர் கருத்துத் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.