வடஅயர்லாந்தில் அமைதியும் நீதியும் ஒப்புரவும் நிறைந்த சமுதாயம் உருவாக திருத்தந்தை அழைப்பு
மார்ச்11, 2009. வடஅயர்லாந்தில் இரு பிரிட்டானிய இராணுவ வீரர்களும் ஒரு காவல்துரையினரும்
கொலை செய்யப்பட்டது மிகுந்த கவலை தருவதாக உள்ளது. உயிரிழந்த அவர்களின் குடும்பங்களுக்கும்
காயமடைந்தவர்களுக்கும் என் ஆன்மீக அருகாமையை உறுதி செய்வதோடு இந்த வன்செயல்களையும் வன்மையாகக்
கண்டிக்கிறோம். இச்செயலானது வடஅயர்லாந்தில் அமைதிக்கென இதுவரை எடுத்துவந்த முன்னேற்ற
நடவடிக்கைகளை வீணாக்கும் ஆபத்தை தன்னஉள் கொண்டுள்ளது. இத்தகைய கொடூரச் செயல்களுக்கான
எண்ணங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளின்வழி அமைதியான, நீதியான, ஒப்புரவுநிறை சமூகத்தைக்
கட்டி எழுப்ப அனைவரும் முன்வரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் எனப் புதன் பொது மறை போதகத்தின்
இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்..