பாகிஸ்தான் – கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றனர் , 060309 .
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இஸ்லாமியர் கிறிஸ்தவ சமூகத்தினரைத் தாக்கிவருவதாக
ஆசியச் செய்தி ஊடகம் கூறுகிறது . ஒரு பெண்மணி கொல்லப்பட்டுள்ளார் . அங்கு சாங்கோவில்
உள்ள பிரிவினைக் கிறிஸ்தவ ஆலயத்தைச் சேர்ந்த 28 பேர் காயப்படுத்தப்பட்டுள்ளனர் . ஸ்வாட்
பள்ளத்தாக்கிலும் பாகிஸ்தானின் வடுபகுதியிலும் வன்முறைகள் தொடர்வதாகச் செய்திகள் கூறுகின்றன
அப்பகுதியில் ஷாரியா என்பது அறிமுகப்படுத்தப் பிறகு குடும்பங்கள் வெளியேறிவருவதாகத் தெரிகிறது
.மார்தான் மாவட்டத்தில் உள்ள டக்பாய் நகரில் 16 பாடல்கள் விற்பனைக் கடைகள் குண்டுவீசித்
தாக்கப்பட்டுள்ளன என ஆசியச் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது .