2009-03-06 16:20:31

நைஜீரியா, ஆயர்களும் இஸ்லாமியத்தலைவர்களும் அமைதிப் பேச்சு 060309.


நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயங்கள் எரியூட்டப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . அங்குள்ள ஆயர்களும் இஸ்லாமியத் தலைவர்களும் இதனைத் தடுக்கும் வழியைத் தேடுகின்றனர் . கத்தோலிக்க இஸ்லாமியக் கலந்துரையாடலில் ஒற்றுமையுடன் இஸ்லாமியரும் கத்தோலிக்கரும் வாழ உடன்படிக்கை ஆகியிருந்தது . நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் ஆதரித்த கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளதன் காரணமாக படுகொலைகளும் ஆலயங்களுக்குத் தீ வைப்பதும் நடந்து வருவதாகத் தெரிவிக்கிறார் பேராயர் கைகாமா . இஸ்லாமியருக்கு எதிராக கிறிஸ்தவ இளைஞர்கள் மசூதிகளுக்குத் தீ வைக்கத் தொடங்கியுள்ளதால் நிலைமை மோசமாகி வருவதாக தெற்கு நைஜீரிய உதவி ஆயர் ஜான் ஓக்கே தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.