திருத்தந்தை உரோம் நகர்மன்றத்தில் மார்ச்சு 9 ல் உரை நிகழ்த்துவார் 0603.
வரும் மார்ச்சு 9 ஆம் தேதி காலை 10.15 மணிக்குத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் உரோமையின்
நகர் மன்றத்துக்குச் செல்லவுள்ளார் . உரோமையின் நகர் மன்றம் இங்குள்ள காபிட்டல் ஹில்
என்னும் இடத்தில் உள்ளது . திருத்தந்தையை உரோமையின் மேயர் திரு . ஜியானி அலெமானோ வரவேற்பார்
. பின் திருத்தந்தையின் வருகையை முன்னிட்டு நடக்கவுள்ள சிறப்பு நகர் மன்றக் கூட்டத்தில்
திருத்தந்தை உரை நிகழ்த்துவார் . நண்பகல் 12 .10 மணிக்கு அங்குக் காத்திருக்கும் நகர
மக்களுக்கு மாடியிலிருந்து வாழ்த்துக்கூறி ஆசி வழங்குவார் . அங்கிருந்து அருகில் உள்ள
தூய பிரான்செஸ்கா ரொமானா துறவு மடத்துக்குச் செல்வார் . அங்கு திருப்பீடத்தில் எழுந்தேற்றமாக
வைக்கப்பட்டுள்ள தேவ நற்கருணைக்கு முன்னர் செப ஆராதனை செய்வார் . பின்னர் அங்குள்ள சிற்றாலயத்தில்
வைக்கப்பட்டிருக்கும் தூய பிரான்செஸ்காவின் திரு உடலுக்கு வணக்கம் செலுத்திய பிறகு திருத்தந்தை
மக்களுக்கு உரை நிகழ்த்துவார் . பிற்பகல் 1.15 மணிக்குத் திருத்தந்தை வத்திக்கான் திரும்புவார்
என வத்திக்கான் திருப்பீடம் தெரிவித்துள்ளது .