2009-03-04 15:44:38

வியட்னாம் ஆயர்களின் தவக்கால அறிக்கை குடும்ப மதிப்பீடுகளை வலியுறுத்துகிறது


மார்ச்4,2009. குடும்பங்களில் அன்புறவைக் கட்டிக்காத்தல், நல்ல காரியங்களுக்காகப் பண உதவி செய்தல் ஆகியவற்றைத் தவக்காலச் செய்தியில் வலியுறுத்தியுள்ளனர் வியட்னாம் ஆயர்கள்.

தாத்தா பாட்டிகள், பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளை மதித்து அவர்களுக்குப் பணிவிடை செய்யுமாறும் அவர்களுடன் சண்டையிட்டு மனத்தாங்கல் இருந்தால் அவர்களை மன்னித்து அவர்களுடன் சமாதானமாகுமாறு ஹனோய் பேராயர் ஜோசப் குவாங் கேட்டுள்ளார்.

வீடுகளில் நல்லிணக்கச் சூழல்களை உருவாக்கி சுயமறுப்புப் பண்புகளை நடைமுறைப்படுத்துமாறும் அவர் கூறினார்.

தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து பிறருக்குப் பிரச்சனை உண்டுபண்ணும் சொற்களையும் செயல்களையும் தவிர்க்குமாறு மற்றுமொரு வியட்னாம் ஆயர் பவுல் காவோ தின் தனது தவக்காலச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.