2009-03-04 15:46:01

சாம்பியா நாடு ஊழல், பொருளாதாரச் சரிவு, வறுமை ஆகிய பிரச்சனைகள் தீர்க்கப்படுமாறு ஆயர்கள் அரசுக்கு வேண்டுகோள்


மார்ச்4,2009. ஊழல், பொருளாதாரச் சரிவு, வறுமை ஆகியவை உட்பட சாம்பியா நாடு எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படுமாறு அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசை விமர்ச்சிக்கும் ஊடகத்துறையினர் மற்றும் பொது மக்களைக் கேள்விகள் கேட்டு நச்சரித்து அவர்களைத் தவறாக நடத்தும் அரசுத்தலைவர் ருபியா பாண்டா அரசின் வன்செயல்கள் நிறுத்தப்படுமாறும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.

1964ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைந்ததிலிருந்து அமைதியாக இருந்த சாம்பியா நாடு, தற்சமயம் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.

அனைத்து அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் தவறு செய்பவர்களை விசாரிப்பதற்கு ஒரு தனிக்குழு உருவாக்கப்படுமாறும் அரசை ஆயர்கள் வலியுறுத்தினர்.








All the contents on this site are copyrighted ©.