அங்கோலா நாட்டினர் தங்கள் வாழ்க்கை நெறிமுறைகள்ச் சீர்படுத்துவதற்கு திருத்தந்தையின்
திருப்பயணம், தொழிநுட்பத் துறை அமைச்சர்
மார்ச்4,2009. அங்கோலா நாட்டினர் தங்கள் வாழ்க்கை நெறிமுறைகள்ச் சீர்படுத்துவதற்கும்
குடும்பங்களைப் பாதுகாப்பதற்கும் திருத்தந்தையின் திருப்பயணம் உதவும் என்று அங்கோலாவின்
அறிவியல் மற்றும் தொழிநுட்பத் துறை அமைச்சர் மரிய காண்டிடா தெய்ஸ்க்ரைரா கூறினார்.
இம்மாதம்
20 முதல் 23 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அங்கோலாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை
முந்னிட்டு ஆங்கோப் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மரிய காண்டிடா, திருத்தந்தையின்
இத்திருப்பயணம் அங்கோலா மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் என்றார்.
அன்பு,
அமைதி, தோழமை ஆறுதல் ஆகிய செய்திகளைத் திருத்தந்தை கொண்டு வருவார் என்பதால் அவரின் பயணம்
மிகவும் முக்கியத்துவம் பெற்றது என்றார் அவர்.
இம்மாதம் 17 முதல் 20 வரை காமரூன்
செல்லும் திருத்தந்தை 20ம் தேதி அங்கோலா செல்வார்.