16 அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: ' செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம்
நன்றாய் விளைந்தது.17 அவன், ' நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து
வைக்க இடமில்லையே! ' என்று எண்ணினான்.18 ' ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை
இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து
வைப்பேன் ' .19 பின்பு, ' என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய
பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு
' எனச் சொல்வேன் ' என்று தனக்குள் கூறிக்கொண்டான்.20 ஆனால் கடவுள் அவனிடம்,
' அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து
வைத்தவை யாருடையவையாகும்? ' என்று கேட்டார்.21 கடவுள் முன்னிலையில் செல்வம்
இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே. '