2009-03-02 15:45:04

இந்தியா, கத்தோலிக்க அருள் சகோதரிக்குப் பாராட்டு 020309.


தென் இந்தியாவில் சிறைச்சாலையில் உள்ளோருக்குச் சிறப்பான சேவை செய்ததற்காக கத்தோலிக்க அருள் சகோதரிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது . அன்னை மரியின் பிரான்சிஸ்கன் துறவு மடத்தைச் சேர்ந்த சகோதரி லீனா கட்டூக்காரன் இராதா சித்ரா நிறுவனத்தின் திரைப்படத் தயாரிப்பாளர் தங்குத்தூரி விஜய சந்தர் அமைத்துள்ள தீனபந்து பதக்கத்தை முதலாவது நபராகப் பெற்றுள்ளார் . 250 தன்னார்வப் பணியாளர்களின் துணையோடு சிறைச்சாலைகளுக்குச் சென்று ஆறுதலும் செபத்தில் ஆர்வமூட்டுவதும் இவர்களின் பணியாகும் . ஹைதராபாத்தில் சகோதரி லீனாவை ஹைதராபாத்தின் அன்னை தெரசா என அழைக்கின்றனர் .








All the contents on this site are copyrighted ©.