1807 - அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் அமெரிக்க காங்கிரசில்
கொண்டுவரப்பட்டது.
1888 – போர் மற்றும் அமைதிக்காலங்களில் சூயஸ் கால்வாய் வழியாக
சுதந்திரமாக கப்பல் போக்குவரத்துக்கு வழி அமைக்கும் கான்ஸ்ட்டாண்டிநோபிள் ஒப்பந்தம் கையெழுத்தானது.
1896
- எத்தியோப்பியா, ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க
நாடொன்றினால் காலனி ஆதிக்க நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம்
ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல்
நடைப் பயணத்தை துவக்கினார்
1939 – கர்தினால் யுஜேனியோ பச்செல்லி, திருத்தந்தையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு 12ம் பத்திநாதர் என்ற பெயரையும் எடுத்துக் கொண்டார்.
1949
- இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் சரோஜினி நாயுடு இறந்தார்
1956
- மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.