மார்ச் 02 தவக்காலச் சிந்தனை நற்செய்தி மத்தேயு 25, 31-46
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியதாவது - வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன்
வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில்
ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச்
செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை
அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம்
வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்;
உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப்
பெற்றுக் கொள்ளுங்கள்.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்;
தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்
கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன்,
என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள் ' ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்,
அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக்
கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக
அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ' என்று கேட்பார்கள். அதற்கு அரசர்,
' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே
செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார். பின்பு இடப்பக்கத்தில்
உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும்
அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை என்பார் என்றார்.
இயேசு
பகுதியில் உலகின் இறுதி நாளில் நாம் சந்திக்கவிருக்கும் கடவுளின் தீர்ப்புப் பற்றிச்
சொல்கிறார். ஆம். நமது வாழ்வின் இறுதி நாள், நாம் இவ்வுலகில் செய்த இரக்க, பிறரன்புச்
செயல்களை வைத்தே தீர்ப்பிடப்டுகிறது. இட்டோர், பெரியோர், இடாதோர், இழிகுலத்தோர் என்ற
தமிழ் முதுமொழிக்கேற்ப கணிக்கப்படுகிறது. மனிதருக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செலுத்தும்
வழிபாடு என்பதை சிந்தையில் இறுத்துவோமா
செபம்- ஆண்டவராகிய இயேசுவே, நான் இன்று
சந்திக்கும் ஒவ்வொருவரையும் நீதியுடன் சந்தித்து நீதியுடன் செயல்பட அருள்தாரும்.