இந்த வெள்ளிக்கிழமை காலை பெல்ஜியத்திலிருந்து வந்த “தூய பேதுருவின் திருப்பீடக்குழு”,
என்ற மன்றத்தின் திருப்பயணிகளைத் திருத்தந்தை தம் மாளிகையில் வரவேற்றுப் பேசினார் .
திருத்தூதர் பவுலின் ஜூபிலி ஆண்டில் திருச்சபை என்பது ஒரே உடல் , நாமெல்லோரும் அதன் உறுப்புக்கள்
என்பதைக் காட்டும் வண்ணம் திருப்பயணம் மேற்கொண்டு உரோமைக்கு வந்துள்ளதைத் திருத்தந்தை
பாராட்டினார் . கிறிஸ்துவின் திருவுடலைத் திருவிருந்தாகப் பெறும் நாம் நம் சகோதர சகோதரிகளில்
வறியவர்களுக்கு உதவுதல் வேண்டும் என்றார் திருத்தந்தை . வந்திருந்த திருப்பயணிகள் ஏழைகளுக்காகச்
சேமித்து , திருத்தந்தையிடம் வழங்கிய காணிக்கைக்குத் திருத்தந்தை நன்றி கூறினார். ஏழைகளுக்கு
உதவுவது வறுமையைப் போக்குவதால் நாம் அமைதியை வேர் ஊன்றச் செய்ய முடியும் எனக்கூறிய திருத்தந்தை
இரக்கத்தின் தாயாகிய கன்னிமரியின் பரிந்துரையை விழைந்து அவர்களுக்குத் தம் அப்போஸ்தலிக்க
ஆசியை வழங்கினார் .