யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க உம்முடைய
சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? ' என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி' மணமகன் தங்களோடு
இருக்கும் வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய
காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள் என்றார். இவ்வசனங்களில் இயேசு நோன்புக்குப்
புதிய விளக்கம் தருகிறார். உடலை வருத்திக் கொள்ளும் வெறும் நோன்பு பக்தி முயற்சியால்
மட்டும் எவரும் இறைவனுக்கு உகந்தவராய் மாற முடியாது. மாறாக, வாழ்க்கையில் கடவுளது பிரசன்னத்தை
உணருவதே உண்மையான நோன்பாகும். பிறரில், குறிப்பாக தேவையில் இருப்போரில் கடவுளைக் கண்டு
அவர்களுக்குத் தேவையான உணவு, உடை உறைவிடம் போன்றவைகளை வழங்குவதாகும். ஆம். நோன்பு மனித
உணர்வுகளை நெறிப்படுத்தும்.