2009-02-23 15:54:15

வியட்னாம் கர்தினால் பவுல் ஜோசப் இறைபதம் அடைந்ததை முன்னிட்டு திருத்தந்தை இரங்கல் செய்தி


23பிப்.2009. வியட்னாம் கர்தினால் பவுல் ஜோசப் பாம் தின் துங் இறைபதம் அடைந்ததை முன்னிட்டு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வியட்னாம் நாட்டின் ஹனோய் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயராகிய இவர் இறந்ததையொட்டி அத்தலத்திருச்சபையின் தற்போதைய தலைவர் பேராயர் ஜோசப் குவாஹ் கியட்டுக்கு இரங்கல் செய்தி அனுப்பிய திருத்தந்தை, கர்தினால் பவுல் ஜோசப் பாம், கஷ்டமான சூழல்களிலும் மிகுந்த தாராளத்தோடும் தளரா விசுவாசத்துடனும் தலத்திருச்சபைக்கும் அகிலத் திருச்சபைக்கும் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டி இருப்பதோடு அவரின் பிரிவால் வருந்துவோருடனான தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 21ம் தேதி சனிக்கிழமை மரணமடைந்த 90 வயதாகும் கர்தினால் பவுல் ஜோசப் பாம் தின் துங்கின் இறப்போடு திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 187 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆகவும் உள்ளது.

1919ம் ஆண்டு பிறந்த கர்தினால் பவுல் ஜோசப் பாம், 1949ல் குருவானார். 1963ல் பாக் நின்னின் ஆயரான இவர், 1994ல் கனோய் உயர்மறைமாவட்ட பேராயராகவும் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். சிறப்பான மேய்ப்புப்பணிகளை, குறிப்பாக குடும்பங்களுக்கான மேய்ப்புப்பணிகளை ஆற்றியுள்ளார் கர்தினால் பவுல் ஜோசப் பாம்







All the contents on this site are copyrighted ©.