2009-02-21 15:35:08

திருத்தந்தைக்காக ஒருநாள் செபநாளைக் கடைபிடிக்க ஜெர்மன் பிறரன்பு நிறுவனம் அழைப்பு


21பிப்.2009. பிப்ரவரி 22 இஞ்ஞாயிறு தூய பேதுருவின் தலைமைப்பீட விழா சிறப்பிக்கப்படுவதையொட்டி விசுவாசிகள் அனைவரும் திருத்தந்தைக்காக ஒருநாள் செபநாளைக் கடைபிடிக்க அழைப்புவிடுத்துள்ளது எய்ட் டுத சர்ச் ன் நீட் என்ற ஜெர்மன் நாட்டு சர்வதேச கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம்.

உண்மை மற்றும் அன்பு இறைவனில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் திருத்தந்தை 16ம் பெனடிக்டிட், இயேசுவின் நற்செய்திக்கு உயிருள்ள சான்றாகவும், அமைதிக்காக ஏங்கும் மனிதசமுதாயத்தை வழிநடத்தவும் தூய ஆவி அவருக்கு உறுதியும் தூண்டுதலும் வழங்கச் சிறப்பாகச் செபிக்குமாறு அந்நிறுவன அறிக்கை அழைப்புவிடுக்கிறது







All the contents on this site are copyrighted ©.