மிலான் நகரில் அகில உலகச் சுற்றுலாக் கருத்தரங்கு – 200209.
மிலான் நகரில் இவ்வெள்ளியன்று நடக்கும் 29 ஆவது அகில உலகச் சுற்றுலாக் கருத்தரங்குக்கு
கர்தினால் ரெனாட்டோ மடல் அனுப்பியுள்ளார் . வத்திக்கான் திருப்பீடத்தின் புலம் பெயர்ந்தோர்
மற்றும் பயணம் மேற்கொள்வோர் மன்றத் தலைவர் கர்தினால் ரெனாட்டோ ரபயேலோ மார்ட்டீனோ . அம்மன்றச்
செயலராக இருப்பவர் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ . அவர்கள் இருவரும் கையொப்பம் இட்டு
அனுப்பியுள்ள மடலில் சுற்றுலாவும், தட்ப வெப்ப மாற்றமும் தொடர்பு உடையதாகத் தெரிவித்துள்ளனர்
. சுற்றுலா, கடவுளின் அழகிய படைப்பைக் கண்டு இரசிக்கவும் பொருளாதார முன்னேற்றத்துக்கும்
உதவுகிறது . சுற்றுலா மனிதருக்கு உதவியாக இருக்க வேண்டும் , மாறாக சுற்றுலாவுக்கு மனிதர்
சேவை செய்யக்கூடாது . எனவே பகுத்தறிவுள்ள சுற்றுலாவை நாம் வரவேற்று இயற்கையை மாசு படுத்தாது
பார்த்துக் கொள்ளவேண்டும் . மாசு படுத்தும் புகையை வாகனங்கள் கக்குவதால் இயற்கை மாசுபடுத்துவதைத்
தவிர்க்கவேண்டும் என மடல் வேண்டுகோள் வைத்துள்ளது .