இலங்கையில் தற்போதைய பாதிப்பு மிக அதிகம் ஆயர் கிங்ஸ்லி. 200209.
சுனாமி தந்த பாதிப்பைவிட இலங்கையில் வடபகுதியில் தற்போதைய பாதிப்பு மிக அதிகம் என்கிறார்
மட்டக்களப்பு ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை . திரிகோணமலை மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டுள்ள
காயமடைந்தோரை நேரில் பார்த்து வந்த ஆயர் கிங்ஸ்லி இவ்வாறு தெரிவித்துள்ளார் . காவல் படை
பாது காப்பில் உள்ளதால் வெளியார் அங்குச் செல்ல அனுமதியில்லை . காயமடைந்தவர்களில் கண்களை
இழந்தவர்கள் , கைகள் ,கால்களை இழந்தவர்கள் , தீக்காயம் பட்டவர்கள் ,மற்றும் உடலிலிருந்து
குண்டுகள் அகற்றப்படாதவர்கள் என மக்கள் வேதனையில் பெருந்துயரப்படுவதாக ஆயர் தெரிவித்துள்ளார்
. ஏராளமானவர்கள் மருத்துவமனைக்கு வருவதால் இட நெருக்கடி காரணமாக வெளியே படுக்கைகளில்
கிடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் ஆயர் . சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் நல்ல உதவிகளைச்
செய்து வருவதாக ஆயர் பாராட்டினார் .