தைவான் நாட்டில் வருங்கால மறைபரப்புப் பணி இளைஞர்களைச் சேர்ந்தது என்கிறார் மறைப்பணியாளர்
தந்தை ஜாக்ஸ் ஜூகதோரா . தந்தை ஜாக்ஸ் எம்எஸ்பி என்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் மறைபரப்புச்
சபையைச் சேர்ந்தவர் . அவர் பல ஆண்டுகளாக தைவானில் மறைப்பணி செய்து வருகிறார். தைவானில்
கத்தோலிக்கரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது . இருப்பினும் அந்நாட்டில் திருச்சபையின்
வளர்ச்சிக்கு நம்பிக்கை இருப்பதாகத் தந்தை தெரிவித்துள்ளார் . பிலிப்பைன்ஸ் , வியட்நாம்
மக்களோடு கலப்புத் திருமணங்கள் நடந்து வரும் தைவானில் குழந்தைகளின் கல்வி முக்கியமானது
என அவர் தெரிவித்துள்ளார் . பொருளாதார வளர்ச்சி காரணமாக சமயப்பற்று குறைந்து வந்தாலும்
திருச்சபையின் எதிர்கால நம்பிக்கை இளையோரைப் பொறுத்தது என்கிறார் தந்தை ஜாக்ஸ் .