திருத்தந்தையின் புனித பூமி்க்கான திருப்பயணம் வீரம் மிக்கது 160209.
திருத்தந்தையின் புனித பூமி்க்கான திருப்பயணம் வீரம் மிக்கது என்கிறார் வத்திக்கான் செய்தித்
தொடர்பாளர் தந்தை லொம்பார்டி . வத்திக்கான் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின்போது
இவ்வாண்டு மே மாதம் 2ஆவது வாரத்தில் திருத்தந்தை ஜோர்டான் , இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனப்பகுதிகளுக்குச்
செல்வார் எனத் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி தெரிவித்தார் . புனித பூமிக்குச் செல்வதற்கு
எல்லோருக்குமே மிக்க ஆர்வம் உள்ளதாகத் தெரிவித்த தந்தை லொம்பார்டி , மீட்பின் வரலாற்றில்
கடவுளும் மனிதரும் சந்தித்த இடம் புண்ணியபூமி எனக்கூறினார் . திருத்தந்தையோடு இறைமக்களும்
மனத்தளவில் திருப்பயணம் செல்லலாம் என அவர் மேலும் கூறினார் . அரசியல் குழப்பங்களும் மோதல்களும்
நடந்து வரும் அப்பகுதிக்குச் சென்று வருவது வீரமிக்க செயல் எனக் கூறினார் தந்தை லொம்பார்டி
. அப்பகுதியில் மோதல்கள் இருந்துவருவதால் அமைதி நகரம் என்ற பெயர் கொண்ட எருசலேத்துக்குத்
திருத்தந்தை சென்று சமாதானத்துக்கு வழிசெய்வது அவசியமாகிறது என்றும் கூறினார் .