பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர் ; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி
அவரைச் சோதித்தனர் . அவர் பெருமூச்சு விட்டு , “இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்
?. இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்” , என்றார் . அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்
.