2009-02-13 20:19:31

பொதுநலத்திட்டங்கள் நன்னெறிகளின் அடிப்படையில் செயல்படவேண்டும்,திருத்தந்தை, 130209 .



பொதுநலத்திட்டங்கள் நன்னெறிகளின் அடிப்படையில் செயல்படவேண்டும்,திருத்தந்தை, 130209 .


பொதுநலத் திட்டங்கள் நன்னெறிகளின் அடிப்படையில் செயல்படவேண்டும் எனக் கூறுகிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .

நாட்டுமக்களுக்கும் , அகில உலக நன்மை கருதியும் அரசுகளின் திட்டங்கள் அமையவேண்டும் எனத் திருத்தந்தை கருத்துக் கூறியுள்ளார் . இம்மாதம் 12 ஆம் தேதி வத்திக்கானுக்கான ஆஸ்திரேலியாவின் புதிய தூதர் டிமத்தி பிஷரை வரவேற்று அந்நாட்டு அரசின் சான்றுப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார் . சந்திப்பின் தொடக்கத்தில ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட 180 க்கும் மேலான உயிர்ச்சேதத்துக்கும் , பாதிப்புக்கும் திருத்தந்தை தம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார் . அந்நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கு வழங்கும் உரிமைகளுக்காகவும் , பல் சமயக் கலந்து உரையாடலை வரவேற்பதற்காகவும் , சுற்றுப்புரத்தைக் காப்பதற்காகவும் , சுற்றியிருக்கும் நாடுகளுக்குக் கொடுக்கும் பாதுகாப்புக்கும் திருத்தந்தை பாராட்டுத் தெரிவித்தார் . ஆஸ்திரேலிய அரசின் நெறிமுறையில் அமைந்த மதிப்பீடுகளையும் , நல்ல அரசு அமைப்பையும் , அண்டை நாடுகளோடு கொண்டுள்ள நல்ல உறவுகளையும் திருத்தந்தை பாராட்டினார். கத்தோலிக்கத் திருச்சபை மக்களுக்கு நன்னெறிகளோடு அமைந்த மருத்துவ வசதிகளைச் செய்து கொடுப்பதில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார் . உதவி என்ற பெயரில் சில அமைப்புக்கள் கருச்சிதைவுக்கு ஆதரவாக இருப்பது எதிர்மறையான போக்கு எனத் தெரிவித்த திருத்தந்தை வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதற்கு உயிரைப் போக்கும் நடத்தை முரணானது என்றார் . ஆஸ்திரேலிய அரசு பொருளாதாரப் பின்னடைவுக்கு நன்னெறியான முறையில் தீர்வு காண்பதைத் திருத்தந்தை பாராட்டினார்.








All the contents on this site are copyrighted ©.