2009-02-13 20:28:36

கார்மேல் சபை அருள் தந்தையர்கள் இலங்கையில் திருப்பணி.130209 .


கார்மேல் சபை அருள் தந்தையர்கள் இலங்கையில் திருப்பணி மேற்கொள்கிறார்கள் . அங்கு கார்மேல் சபையைச் சேர்ந்த 50 அருள் சகோதரிகள் 1935 ஆம் ஆண்டிலிருந்து பணிசெய்து வருகிறார்கள் . இலங்கையில் நடந்து வரும் மோதல் காரணமாக கார்மேல் சபையைச் சேர்ந்த குருக்களின் பணித்தளங்கள் மூடப்பட்டன . 2 கோடியே 10 லட்சம் மக்கள் வாழும் இலங்கையில் 6 விழுக்காடு மக்கள் கிறிஸ்தவர்கள் . ஆயர்களின் அழைப்பை ஏற்று அங்கு பணிபுரியச் செல்லும் கார்மேல் சபையினர் தேவ அழைத்தலையும் ஊக்குவிக்கவுள்ளனர் . அங்கு நடக்கும் மோதலைத் தவிர்க்கவும் , பொதுமக்களுக்குப் பாதுகாப்புத் தருமாறும் திருத்தந்தை இம்மாதம் 4 ஆம் தேதி அழைப்பு விடுத்திருந்தார் .








All the contents on this site are copyrighted ©.