கார்மேல் சபை அருள் தந்தையர்கள் இலங்கையில் திருப்பணி.130209 .
கார்மேல் சபை அருள் தந்தையர்கள் இலங்கையில் திருப்பணி மேற்கொள்கிறார்கள் . அங்கு கார்மேல்
சபையைச் சேர்ந்த 50 அருள் சகோதரிகள் 1935 ஆம் ஆண்டிலிருந்து பணிசெய்து வருகிறார்கள் .
இலங்கையில் நடந்து வரும் மோதல் காரணமாக கார்மேல் சபையைச் சேர்ந்த குருக்களின் பணித்தளங்கள்
மூடப்பட்டன . 2 கோடியே 10 லட்சம் மக்கள் வாழும் இலங்கையில் 6 விழுக்காடு மக்கள் கிறிஸ்தவர்கள்
. ஆயர்களின் அழைப்பை ஏற்று அங்கு பணிபுரியச் செல்லும் கார்மேல் சபையினர் தேவ அழைத்தலையும்
ஊக்குவிக்கவுள்ளனர் . அங்கு நடக்கும் மோதலைத் தவிர்க்கவும் , பொதுமக்களுக்குப் பாதுகாப்புத்
தருமாறும் திருத்தந்தை இம்மாதம் 4 ஆம் தேதி அழைப்பு விடுத்திருந்தார் .