இன்றைய மறைபோதகம் முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் இருந்தது . வந்திருந்தோரை
வாழ்த்தி வரவேற்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .
கீழைத்திருச்சபையிலும் மேலைத்
திருச்சபையிலும் உள்ள ஞானிகள் பற்றி முன்னர் போன்று மறையுரை வழங்க இருப்பதாகத் திருத்தந்தை
தெரிவித்தார் . கி.பி.575 இல் பிறந்தவர் ஜான் கிளைமாக்கஸ் . கிளைமாக்கஸ் என்றால் ஏணி
என்று பொருள் . அவர் சீனாய் மலைக்கு அருகில் வாழ்ந்தவர். உலகைத் துறந்து அன்பில் நிறைவுள்ள
வாழ்க்கை வாழ்வது பற்றி மிகச் சிறந்த குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார் . மூன்று படிகளில்
இந்தப் பயணம் தொடர்வதாகக் கூறுகிறார் . முதலாவது உலகப் பற்றுக்களிலிருந்து விடுபட்டு
நற்செய்தி காட்டும் புண்ணிய நிலையை அடைந்து செபத்தில் கடவுளோடு ஆழமான உறவு கொள்வதாகும்
. இரண்டாவது நிலையில் நம்மைச் சோதிக்கும் ஆசாபாச வலைகளிலிருந்து ஆன்மா மீள்வதாகும் .
அதற்கு மாறாக நல்ல புண்ணியங்களில் வளரவேண்டும் . தன்னையே மறுக்கும்போது, ஆசாபாசங்கள்
கடவுளுடைய அருள் வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் . மூன்றாவது நிலையில் நாம் நம் உள்ளத்தைச்
சோதனயிட்டு நம்முடைய எண்ணங்களை ஆராய்ந்து உள்ளத்தின் உணர்ச்சிகளை அறிதல் வேண்டும் .
இது நம் உள்ளத்தில் அமைதியைத் தரும் . இதற்குப் பிறகு நாம் கடவுளைப் பற்றிய மறை உண்மைகளை
ஆராய வழிபிறக்கும் . ஏணியின் இறுதியில் விசுவாசம் , நம்பிக்கை , அன்பு ஆகியவை உள்ளன
. மனிதக் காதலைப் போல இறைவனோடு நம் ஆன்மா இரண்டறக் கலந்து ஒன்றுபடவேண்டும் . நம்முடைய
திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவின் இறப்பு , உயிர்ப்பில் பங்கு பெறவேண்டும் என்றும்
, நாம் தொடர்ந்து மனமாற்றம் பெற்று தூய ஆவியானவரின் உதவியால் தூய்மையடைய வேண்டும் என்றும்
ஜான் கிளைமாக்கஸ் கூறுகிறார்.
வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கூறி தமது அப்போஸ்தலிக்க
ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.