ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர் அருட்பணி பினே கண்டுல்னா
10பிப்.2009. இந்தியாவின் ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக அருட்பணி பினே கண்டுல்னாவை
இன்று நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ராஞ்சி உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்திருந்த
கோன்ராவில் 1964 ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிறந்த இவர், ராஞ்சி புனித ஆல்பெர்ட் பெரிய
குருத்துவ கல்லூரியில் மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பை முடித்தார். 1994ம் ஆண்டு
ஏப்ரல் 23ம் தேதி கோண்ட்டி மறைமாவட்டத்திற்கெனக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1997
முதல் 2001ம் ஆண்டு வரை உரோமை உர்பான் பாப்பிறை பல்கலைகழகத்தில் பயின்று திருச்சபை சட்டத்தில்
முனைவர் பட்டமும் பெற்றார்.
2002 ம் ஆண்டு முதல் கோண்ட்டி ஆயருக்குச் செயலர்,
கோண்ட்டி புனித மிக்கேல் பேராலய உதவிப் பங்குத்தந்தை எனச் சில பொறுப்புக்களை வகித்த இவர்,
2004 ம் ஆண்டில் முதல் டெல்லி திருப்பீடத் தூதரகத்தில் பணியாற்றத் தொடங்கினார்.