2009-02-06 17:23:06

இந்தியத் திருச்சபை மிகமுக்கியமானது . வத்திக்கான் அதிகாரி. 0602


இந்திய கத்தோலிக்கத் திருச்சபை தற்பொழுது மிகமுக்கியமானதாகக் கருதப்படுவதாக வத்திக்கான் அதிகாரி கூறுகிறார் . தடைகள் வந்தாலும் திருச்சபை தம் பணியை நல்ல முறையில் ஆற்றி வருவதாக கீழைத் திருச்சபைகளுக்கான வத்திக்கான் மன்றத் தலைவர் கர்தினால் லெயோனார்டோ சாந்த்ரி தெரிவித்துள்ளார் . உரோமையி்ல் ஜனவரி 26 லிருந்து 30 வரை கீழைத் திருச்சபைகளுக்கு நிதி உதவி அளிக்கும் ரோக்கோ எனும் தொண்டு சபைகளின் கூட்டம் நடைபெற்றது . இந்தியத் திருச்சபை தீவிரவாதிகளால் வன்முறைகளைச் சந்தித்து வந்துள்ளது . சென்ற நவம்பர் மாதம் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட கர்தினால் சாந்த்ரி இந்தியாவின் புனிதர்கள் முத்திபெற்றவர்களின் அடிச்சுவட்டில் அது ஒரு அமைதிப்பயணம் எனத் தெரிவித்தார் . இந்தியத்திருச்சபை தடைகளைத் தாண்டி வளர்ச்சி பெற்று வருவதாகத் தெரிவித்தார் . பல் வேறு துறைகளிலும் திருச்சபை மக்களுக்குத் சேவை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார் . எனவே கர்தினால் சாந்த்ரி இந்தியத் திருச்சபைக்கு நிதி நிறுவனங்கள் தாராளமாக உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.