தாய்லாந்தில் குழந்தைகள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது . இந்த வியாழன் அன்று பிரி்ட்டிஷ்
தூதரகத்தில் தாய்லாந்துக்கான இங்கிலாந்தின் தூதர் குவிண்டன் குவெய்லி இதனைத் தொடங்கி
வைத்தார் . இதற்கு நிதி உதவியை இங்கிலாந்தும் தாய்லாந்தில் உள்ள வாணிபர்களும் கொடுத்துள்ளார்கள்
. இவர்கள் இந்தத் தொண்டு நிறுவனத்தின் தேவைகளையும் செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்வார்கள்
. இங்கிலாந்து 7 இலட்சம் பவுண்டுகளை கொடுத்து உதவியுள்ளது . இது அநாதைக் குழந்தைகளுக்கும்
, உடல் நலம் குன்றியோருக்கும் , சாலைகளில் வாழ்வோருக்கும் , எச் ஐ வியால் பாதிக்கப்பட்டுள்ள
குழந்தைகளுக்கும் தங்கும் வசதியும் , கல்வியும் கொடுக்க உதவியாக இருக்கும் என இந்த மன்றத்தின்
உறுப்பினர் ஆண்ட்ரூ ஸ்காடிங் தெரிவித்துள்ளார் .