ஐந்தாவது ஆசிய இளையோர் தினம் பிலிப்பைன்சில் நவம்பரில் நடைபெறவுள்ளது
04பிப்.2009. ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் இளையோருக்கான அலுவலகம் வரும் நவம்பர்
20 முதல் 27 வரை பிலிப்பைன்சில் ஐந்தாவது ஆசிய இளையோர் தினத்தைச் சிறப்பிக்கவுள்ளது.
ஆசிய
இளையோரின் விசுவாசம், இறைவார்த்தை, நற்கருணை மீதான அன்பு போன்றவைகளைப் புதுப்பிக்கும்
நோக்கில் இடம்பெறவுள்ள இந்த எட்டு நாள் கருத்தரங்கில் ஆசிய சூழலில் இறைவார்த்தையை வாழ்ந்து
நல்மாற்றத்தின் கருவிகளாகச் செயல்பட ஊக்கமளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
22
நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ இரண்டாயிரம் ஆசிய இளையோர் இதில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர்
27ம் தேதி நிறைவடையும் இக்கருத்தரங்கைத் தொடர்ந்து 27 முதல் 30 வரை இளையோரிடையே பணிபுரியும்
குருக்களுக்கான கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டமானது இளையோரிடையே பணிபுரியும் குருக்களுக்கும்
இளைஞர் தலைவர்களுக்கும் இடையேயான நல்லுறவை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருக்கும்