இலங்கையின் இன்றைய நிலைகள் குறித்து தான் ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாகவும், துன்புறும்
மக்கள் சார்பாக விண்ணப்பம் ஒன்றை விடுப்பதாகவும் இப்புதன் பொதுப்பேட்டியின் இறுதியில்
கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மோதல்களின் கொடூரங்களையும், பாதிக்கப்படுவோரின்
எண்ணிக்கை அதிகரிப்பையும் குறித்து அறிய வரும் இவ்வேளையில், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள்,
இடம்பெயர்வதற்கான சுதந்திரம், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ உதவி, பொதுமக்களுக்கான பாதுகாப்பு,
உணவு உதவிகள் போன்றவை இடம்பெற உதவும் நோக்கில் மனிதபிமான உதவிகளை போரிடும் துருப்புகள்
அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பிப்பதாகக் கூறினார் பாப்பிறை.
இலங்கையின் கத்தோலிக்கர்களாலும்
ஏனைய மதத்தவர்களாலும் போற்றி வணங்கப்படும் மடு மாதா, அந்த அன்பு நிறை நாட்டிற்குத் தேவையான
அமைதியையும் ஒப்புரவையும் பெற உதவுவாளாக எனவும் வேண்டினார் திருத்த்ந்தை 16ம் பெனடிக்ட்.